ஸ்ரீ இராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர். செல்வா டயீட்டஸ் கலந்து கொண்டார். முதன்மை இயக்கு அலுவலர் ஸ்ரீ.வி.ராமகிருஷ்ணா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். டி.நிர்மலா அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து, 10 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 98 இளங்கலை பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற முதுகலை நர்சிங் மாணவி பி.சிந்துஜா மற்றும் போஸ்ட் பேசிக் நர்சிங் மாணவி லியா, இளங்கலை நர்சிங் மாணவி கிருத்திகா உள்ளிட்டோருக்கு விருது மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் டாக்டர். செல்வா டயீட்டஸ் பேசுகையில், செவிலியர்கள் தங்களுடைய அறிவுத்திறனை மேன்மைபடுத்திக்கொள்ள சமீபத்திய தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிந்து செயல்படவேண்டும். நாம் இலக்குகளை அமைத்து அவைகளை அடைய முயற்சிக்க வேண்டும்" என்றார்.

நிரைவாக துணை பேராசிரியர் சித்ரா ரவிக்குமார் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...