வால்பாறையில் சிறுத்தை தாக்கிய சிறுவனுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டது

வனத்துறை அமைச்சர் உத்தரவின்படி, வனத்துறை செயலாளர், கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் சிறுத்தை தாக்கி காயம் ஏற்பட்ட சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 10,000 உடனடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கிய சிறுவனுக்கு வனத்துறையினர் ரூபாய் 10 ஆயிரம் நிவாரண நிதி உதவி வழங்கினர்.

கோவை மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட், 2 வது டிவிசனில் வசித்து வரும் 11 வயது சிறுவன், இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் எஸ்டேட் குடியிருப்பு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுத்தை தாக்கியதில், சிறுவனின் இடது தோள்பட்டை, முதுகு பகுதி மற்றும் மார்பு பகுதியில் சிறிய அளவிலான நகக் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்தை தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் உத்தரவின்படி, வனத்துறை செயலாளர், கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் சிறுத்தை தாக்கி காயம் ஏற்பட்ட சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 10,000 உடனடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.



நிவாரண தொகையை, மானாம்பல்லி வனசரகர் மணிகண்டன் சிறுவனின் குடும்பத்தாரிடம் வழங்கினர். மேலும், சிறுவனுக்கு புதிய ஆடையும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...