கோவை மாநகராட்சியை நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கு 100 வார்டுகளிலும் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் 33 சிறப்பு அதிகாரிகளும், 7 நகராட்சிகளுக்கு 7 சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சியை நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கு 100 வார்டுகளிலும் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவை மாநகராட்சி சார்பாகத் தினமும் சுமார் 4000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் என அனைவரையும் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கோவை மாநகராட்சியை நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கு 100 வார்டுகளிலும் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் 33 சிறப்பு அதிகாரிகளும், 7 நகராட்சிகளுக்கு 7 சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்வது, தேவையான உதவிகள் செய்வது, தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது உள்ளிட்ட பணிகளைச் சரிவரச் செய்கிறார்களா? என நாங்கள் தினமும் ஆய்வு மேற்கொள்வோம்.
தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல விரும்புபவர்கள் அரசு ஆம்புலன்சில் செல்கிறார்களா? தனியாக வாகனத்தில் எதுவும் செல்கிறார்களா? என தினமும் கண்காணிப்போம்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றவாறு உயர் அதிகாரிகளிடம் தகவல் கூறுவது, தினமும் அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவை மாநகராட்சி சார்பாகத் தினமும் சுமார் 4000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் என அனைவரையும் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கோவை மாநகராட்சியை நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கு 100 வார்டுகளிலும் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் 33 சிறப்பு அதிகாரிகளும், 7 நகராட்சிகளுக்கு 7 சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்வது, தேவையான உதவிகள் செய்வது, தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது உள்ளிட்ட பணிகளைச் சரிவரச் செய்கிறார்களா? என நாங்கள் தினமும் ஆய்வு மேற்கொள்வோம்.
தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல விரும்புபவர்கள் அரசு ஆம்புலன்சில் செல்கிறார்களா? தனியாக வாகனத்தில் எதுவும் செல்கிறார்களா? என தினமும் கண்காணிப்போம்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றவாறு உயர் அதிகாரிகளிடம் தகவல் கூறுவது, தினமும் அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.