கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 100 சிறப்பு கொரோனா அதிகாரிகள் நியமனம்

கோவை மாநகராட்சியை நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கு 100 வார்டுகளிலும் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் 33 சிறப்பு அதிகாரிகளும், 7 நகராட்சிகளுக்கு 7 சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியை நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கு 100 வார்டுகளிலும் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை மாநகராட்சி சார்பாகத் தினமும் சுமார் 4000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் என அனைவரையும் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கோவை மாநகராட்சியை நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கு 100 வார்டுகளிலும் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் 33 சிறப்பு அதிகாரிகளும், 7 நகராட்சிகளுக்கு 7 சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்வது, தேவையான உதவிகள் செய்வது, தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது உள்ளிட்ட பணிகளைச் சரிவரச் செய்கிறார்களா? என நாங்கள் தினமும் ஆய்வு மேற்கொள்வோம்.

தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல விரும்புபவர்கள் அரசு ஆம்புலன்சில் செல்கிறார்களா? தனியாக வாகனத்தில் எதுவும் செல்கிறார்களா? என தினமும் கண்காணிப்போம்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றவாறு உயர் அதிகாரிகளிடம் தகவல் கூறுவது, தினமும் அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...