சாலைகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தைத் திரும்பப் பெற்ற மாநகராட்சியின் முடிவுக்கு 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' வரவேற்பு

நகரின் முக்கிய சாலைகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை வாபஸ் பெற்ற மாநகராட்சியின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பு, ஆக்கபூர்வமான வழிகளில் வருவாய் அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு சில யோசனைகளை தெரிவித்துள்ளது.


கோவை: நகரின் முக்கிய சாலைகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை வாபஸ் பெற்ற மாநகராட்சியின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பு, ஆக்கபூர்வமான வழிகளில் வருவாய் அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு சில யோசனைகளை தெரிவித்துள்ளது.

'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பின் தலைவர், சி.எம்.ஜெயராமன் கூறியதாவது:-

நகரின் முக்கிய சாலைகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை வாபஸ் பெற்ற மாநகராட்சியின் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. ஆக்கப்பூர்வமான முறையில் பல்வேறு வழிகளில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாயை அதிகரிக்க முடியும். அதற்கு எங்கள் அமைப்பு சார்பில் சில யோசனைகளை வழங்குகிறோம்.

1. பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் மற்றும் ராம்நகர், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் இடங்களில் 'மல்டி லெவல் பார்க்கிங் திட்டத்தை' செயல்படுத்தலாம்.

2. மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாததால் ரோட்டில் மக்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதை தவிர்க்க மாநகராட்சி சார்பில் பிரத்தியேக பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்தி அதற்கு தனியார் விதிக்கும் கட்டணத்தை விட பாதி கட்டணத்தில் மாதந்தோறும் வசூலிக்கலாம். இதுபோன்ற திட்டம் ஏற்கனவே பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பின்பற்றப்படுகிறது.

3. அங்கீகாரமற்ற லே-அவுட்க்களை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் மூலம் மாநகராட்சிக்கு சிறந்த முறையில் வருவாய் ஈட்ட முடியும்.

4. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு பொழுது போக்கும் வகையில் பூங்காக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள உதவும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய இடங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இது போன்ற இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் இத்திட்டத்தை செயல்படுத்தினால் எதிர்வரும் காலங்களில் மக்கள் முழுமையாக இவற்றைப் பயன்படுத்தத் துவங்கும்போது சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கலாம்.

5. வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளன. சிறப்பு சலுகை திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கில் நிறுவையில் உள்ள சொத்து வரி பாக்கியை மாநகராட்சி நிர்வாகம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இதுமட்டுமல்ல மேலும் பல்வேறு ஆக்கபூர்வமான வழிகளை செயல்படுத்துவதன் மூலம் கோவை மாநகராட்சியின் வருவாயை பல மடங்கு அதிகரிக்க முடியும். எதிர்வரும் நாட்களில் மாவட்ட நிர்வாகம் இத்தகைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...