தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.
கோவை: தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட உள்ள அதிகாரிகளுக்கு, ஆன்லைன் மூலம் தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அவர்களுக்கு வேட்பு மனுக்களை வாங்குதல், நடத்தை விதிமுறைகள், வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனுத்தாக்கலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட உள்ள அதிகாரிகளுக்கு, ஆன்லைன் மூலம் தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அவர்களுக்கு வேட்பு மனுக்களை வாங்குதல், நடத்தை விதிமுறைகள், வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனுத்தாக்கலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.