தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி மக்கள் நலத் திட்டங்கள் விரைவில் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார் என பொள்ளாச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி மக்கள் நலத் திட்டங்கள் விரைவில் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார் என பொள்ளாச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சமூக பொறுப்புணர்வு நிதியில் 75 இலட்சம் மதிப்பீட்டில் 500 எல் பி எம் திறனுள்ள பிராணவாயு கலன் (ஆக்சிஜன் பிளான்ட்) பயன்பாட்டை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

பின்னர் ராசக்காபாளையத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசும்போது, கோவை மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சிகளில் 39 சாலை மேம்பாட்டு பணிகளுக்கு 24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளதாகவும், மேலும் மகளிருக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 2,800 மகளிருக்கு ரூபாய் 21 கோடியே 65 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி அரசின் திட்டங்கள் விரைவாக பொது மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சமூக பொறுப்புணர்வு நிதியில் 75 இலட்சம் மதிப்பீட்டில் 500 எல் பி எம் திறனுள்ள பிராணவாயு கலன் (ஆக்சிஜன் பிளான்ட்) பயன்பாட்டை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
பின்னர் ராசக்காபாளையத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசும்போது, கோவை மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சிகளில் 39 சாலை மேம்பாட்டு பணிகளுக்கு 24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளதாகவும், மேலும் மகளிருக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 2,800 மகளிருக்கு ரூபாய் 21 கோடியே 65 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி அரசின் திட்டங்கள் விரைவாக பொது மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்.