மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளைக் கொண்டு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளைக் கொண்டு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசியைச் சேர்ந்த குமார்(31), தனலட்சுமி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர்.
குமார் சரக்கு வாகன டிரைவராகவும், தனலட்சுமி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், தனலட்சுமி தனக்குத் துரோகம் செய்து தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளதாகச் சந்தேகமடைந்து அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று இரவு வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தனலட்சுமி கழுத்தை அறுத்து உள்ளார்.

இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற 15 வேலம்பாளையம் போலீசார் குமாரைக் கைது செய்து தனலட்சுமியின் உடலைப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசியைச் சேர்ந்த குமார்(31), தனலட்சுமி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர்.
குமார் சரக்கு வாகன டிரைவராகவும், தனலட்சுமி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், தனலட்சுமி தனக்குத் துரோகம் செய்து தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளதாகச் சந்தேகமடைந்து அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று இரவு வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தனலட்சுமி கழுத்தை அறுத்து உள்ளார்.
இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற 15 வேலம்பாளையம் போலீசார் குமாரைக் கைது செய்து தனலட்சுமியின் உடலைப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.