அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
கோவை: தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 20, வியாழக்கிழமை) பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையிலும் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில், முன்களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்ப்பட்ட இணை நோய் (நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்) உள்ளவர்களுக்கு
மேலும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கோவையில் நடைபெற்று வரும் இந்த முகாமில் காலையில் இருந்தே முன்களப் பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டோர் ஆர்வமுடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
"பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி உள்ளவர்கள் கட்டாயம் இந்த முகாமை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் இதே முகாம்களில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களும் தடுப்பூசி செல்லுதிகொள்ளலாம்"என்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.