ஆன்லைன் ரம்மி மூலம் ரூ.1.50 லட்சத்தை இழந்து விட்டதால், தந்தை கண்டித்ததால், விக்னேஷ்வரன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 24). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். விக்னேஷ்வரன் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
அதில், அவர் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்து விட்டதால், அவரது தந்தை செல்வராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், விக்னேஷ்வரன் கோபித்து கொண்டு, கோட்டூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு மனவேதனையில் இருந்த அவர், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது பாட்டி அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால், அவர் எங்கும் கிடைக்கவில்லை என்பதால், உடனே இதுகுறித்து அவர் செல்வராஜிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், காணாமல் போன மகனை குறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து மாயமான விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர்.
அதில், அவர் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்து விட்டதால், அவரது தந்தை செல்வராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், விக்னேஷ்வரன் கோபித்து கொண்டு, கோட்டூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு மனவேதனையில் இருந்த அவர், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது பாட்டி அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால், அவர் எங்கும் கிடைக்கவில்லை என்பதால், உடனே இதுகுறித்து அவர் செல்வராஜிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், காணாமல் போன மகனை குறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து மாயமான விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர்.