வழக்கை விசாரித்த நீதிபதி, ரமேஷ் மற்றும் தனபாலன் இருவருக்கும், நீதிமன்ற காவலை பிப்ரவரி 2-ம் தேதி வரை என மேலும் 15 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.
கோவை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ரமேஷ், தனபால் ஆகிய இருவரின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் தடயங்களை அழித்தாகவும், சாட்சியங்களை மிரட்டியதாகவும் கபகராஜின் சகோதரர் தனபாலன் மற்றும் ஒரு உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 2 பேரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்களை கூடலூர் சிறையில் அடைத்தனர். இவர்களது நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், இன்று அந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ரமேஷ் மற்றும் தனபாலன் இருவருக்கும், நீதிமன்ற காவலை பிப்ரவரி 2-ம் தேதி வரை என மேலும் 15 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் தடயங்களை அழித்தாகவும், சாட்சியங்களை மிரட்டியதாகவும் கபகராஜின் சகோதரர் தனபாலன் மற்றும் ஒரு உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 2 பேரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்களை கூடலூர் சிறையில் அடைத்தனர். இவர்களது நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், இன்று அந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ரமேஷ் மற்றும் தனபாலன் இருவருக்கும், நீதிமன்ற காவலை பிப்ரவரி 2-ம் தேதி வரை என மேலும் 15 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.