சரவணம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அவர் ஆப்பிரிக்கவில் உள்ள ருவாண்டா நாட்டைச் சேர்ந்த சிப்பின்ஸ் வயது 32, என்பதும், இவர் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து முடித்ததும் தெரியவந்தது.
கோவை: கோவையில் சட்டவிரோதமாக தங்கி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த ருவாண்டா நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை சரவணம்பட்டி பகுதியை அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர், மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், சரவணம்பட்டி போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு கல்லூரி முன்பு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வெளிநாட்டு வாலிபர் ஒருவரை கைது பிடித்தனர்.
பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அவர் ஆப்பிரிக்கவில் உள்ள ருவாண்டா நாட்டைச் சேர்ந்த சிப்பின்ஸ் வயது 32, என்பதும், இவர் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து முடித்ததும் தெரியவந்தது.
மேலும், விசாரணையில் அவருடைய பாஸ்போர்ட்டை டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்திருப்பதும், விசா முடிந்தும் ஆறு வருடங்களாக கோவையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர், கல்லூரி மாணவர்களைப் போல கல்லூரி முன்பு நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதியை அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர், மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், சரவணம்பட்டி போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு கல்லூரி முன்பு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வெளிநாட்டு வாலிபர் ஒருவரை கைது பிடித்தனர்.
பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அவர் ஆப்பிரிக்கவில் உள்ள ருவாண்டா நாட்டைச் சேர்ந்த சிப்பின்ஸ் வயது 32, என்பதும், இவர் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து முடித்ததும் தெரியவந்தது.
மேலும், விசாரணையில் அவருடைய பாஸ்போர்ட்டை டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்திருப்பதும், விசா முடிந்தும் ஆறு வருடங்களாக கோவையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர், கல்லூரி மாணவர்களைப் போல கல்லூரி முன்பு நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.