தலைமையாசிரியை கீதாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மங்கலம் போலீசார் இன்று அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி மாணவர்களை வற்புறுத்தியும், மாணவர்களை ஜாதி பெயர் சொல்லி திட்டிய விவகாரத்தில், அரசு பள்ளி தலைமையாசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையை, மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய பள்ளி தலைமையாசிரியை சொன்னதாகவும், அதை மறுத்த மாணவர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவத்தில், பள்ளி தலைமையாசிரியை கீதாவிடம் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், அவரை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர், தலைமை ஆசிரியர் கீதா மீது திருப்பூர், மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், தலைமையாசிரியை கீதா, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில், நீதிமன்றம் அறிவுரைப்படி, மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நீதிபதி சொர்ணம் நடராஜன் விசாரித்தார். இதில், அரசு தரப்பில் முன் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதாடப்பட்டது.
இந்த நிலையில், தலைமையாசிரியை கீதாவை மங்கலம் போலீசார் இன்று கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையை, மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய பள்ளி தலைமையாசிரியை சொன்னதாகவும், அதை மறுத்த மாணவர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவத்தில், பள்ளி தலைமையாசிரியை கீதாவிடம் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், அவரை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர், தலைமை ஆசிரியர் கீதா மீது திருப்பூர், மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், தலைமையாசிரியை கீதா, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில், நீதிமன்றம் அறிவுரைப்படி, மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நீதிபதி சொர்ணம் நடராஜன் விசாரித்தார். இதில், அரசு தரப்பில் முன் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதாடப்பட்டது.
இந்த நிலையில், தலைமையாசிரியை கீதாவை மங்கலம் போலீசார் இன்று கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.