பொள்ளாச்சியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஏழாம் வகுப்பு மாணவி - பொதுமக்கள் பாராட்டு!

மேலும், சேகரித்து வைக்கப்பட்டுள்ள நாணயங்களை முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாகவும், நாணயங்களை பாதுகாப்பாக அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஏழாம் வகுப்பு மாணவியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆன்ராய்டு மொபைல் போன்கள் எனப்படும் செல்போன்கள் என்றைக்கு வந்ததோ, அன்று முதல் செல்போன் என்பது தவிர்க்க முடியாத பொருளாக மாறிவிட்டது.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் பாடபுத்தகங்களுக்கு பதிலாக செல்போனை எடுத்துக்கொண்டு அதில் விளையாடுவது, யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பது வாடிக்கையாக அமைந்துவிட்டது.

ஒரு சில மாணவ-மாணவிகள் மட்டுமே விளையாட்டு, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.



பொள்ளாச்சி கந்தசாமி வீதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் முருகேசன் என்பவரது மகள் மிருதுளா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறுவயது முதல் பழங்கால நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.



தலைவர்களை சிறப்பித்தும், முக்கிய நிகழ்வுகளை சிறப்பித்தும் வெளியிடப்பட்ட நாணயங்கள், 50வது சுதந்திர வெள்ளிவிழா, உலகத் தமிழ் மாநாட்டை நினைவுகூறும் வகையில் வெளியிடப்பட்ட நாணயங்கள், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், நேதாஜி, நேரு, லால் பகதூர் சாஸ்திரி, அம்பேத்கர், அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் நூற்றாண்டு விழா நாணயங்கள், உலக உழவர் தினம், பல்லுயிர் தினம் நினைவாக வெளியிட்ட நாணயங்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் சிறப்பு குறித்து ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நாணயங்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பழங்கால ரூபாய் நோட்டுகளை சேகரித்து வைத்துள்ளார்.

தனது தாத்தா, தந்தை போல தானும் சிறுவயதிலிருந்தே நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தற்போது மாணவ மாணவிகள் செல்போனில் விளையாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருக்கின்றனர்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி வாழ்வை சீரழித்து வருகிறார்கள்.

எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் நாணயம் சேகரிப்பு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் மாணவர்கள் ஈடுபடவேண்டும் என்று தெரிவித்த மாணவி சேகரித்து வைக்கப்பட்டுள்ள நாணயங்களை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்க உள்ளதாகவும், இந்த நாணயங்களை பாதுகாப்பாக அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்றும் மாணவி மிருதுளா கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...