நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு கொடுத்தவர்களிடம் நாளை மற்றும் 22ம் தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்துகிறார்.
கோவை: கோவையில் தி.மு.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு கொடுத்தவர்களிடம், 20 மற்றும் 22ம் தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்துகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், மின்னணு இயந்திரங்களை தயார் செய்து வைத்துள்ளது. அரசியல் கட்சியினரும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க., சார்பில் போட்டியிட, விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 20 மற்றும் 22ம் தேதிகளில் கோவை சுகுணா ஆடிட்டோரியத்தில் நேர்காணல் நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்த உள்ளார்.
சிங்காநல்லூர், கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளுக்கு 20ம் தேதி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை, நேர்காணல் நடக்கிறது.
சர்க்கார் சாமக்குளம், இடிகரை, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம் பேரூராட்சி வார்டுகளுக்கும் அன்றைய தினமே நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இருக்கும் மற்ற அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் 22ம் தேதி நேர்காணல் நடத்தப்படுகிறது. நேர்காணலில் பங்கேற்க வரும் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பூத் புத்தகத்தை பூர்த்தி செய்து கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், மின்னணு இயந்திரங்களை தயார் செய்து வைத்துள்ளது. அரசியல் கட்சியினரும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க., சார்பில் போட்டியிட, விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 20 மற்றும் 22ம் தேதிகளில் கோவை சுகுணா ஆடிட்டோரியத்தில் நேர்காணல் நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்த உள்ளார்.
சிங்காநல்லூர், கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளுக்கு 20ம் தேதி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை, நேர்காணல் நடக்கிறது.
சர்க்கார் சாமக்குளம், இடிகரை, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம் பேரூராட்சி வார்டுகளுக்கும் அன்றைய தினமே நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இருக்கும் மற்ற அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் 22ம் தேதி நேர்காணல் நடத்தப்படுகிறது. நேர்காணலில் பங்கேற்க வரும் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பூத் புத்தகத்தை பூர்த்தி செய்து கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.