கோவையில் கொரோனா பாதிக்கப்படுபவர்களில் 88 சதவீதம் பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி..!

தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 88 சதவீதம் பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களில் 100க்கும் கீழ் இருந்த நோய் பாதிப்பு எண்ணிக்கை தற்போது, நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கொடிசியா போன்ற இடங்களில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நோயின் பாதிப்பு தன்மை சற்று குறைவு என்பதால், கொரோனா பாதிக்கப்படுபவர்களில், 88 சதவீதம் பேருக்கு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவையில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.

கொரோனா பாதிக்கப்படுபவர்களில், 88 சதவீதம் பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்' என்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...