கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 3,100 கொரோனா படுக்கைகள் தயார் - அதிகாரி தகவல்..!

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள மீண்டும் படுக்கை வசதிகள் தற்போதும் தயார் நிலையில் உள்ளன. இந்த படுக்கை வசதிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது அலை தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 2,042 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 10,147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்தபோது செப்டம்பர் மாதத்தில் கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருந்தது.

பின்பு தொற்று குறைந்தால் அந்த படுக்கை வசதிகள் கொண்ட தனியார் மண்டபம், இடங்கள் மூடப்பட்டன. தற்போது கோவையில் மீண்டும் 3-வது அலை அச்சுறுத்த தொடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் சிகிச்சை அளிக்கும் இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தற்போது கொரோனா 3வது அலையில் கிராமப்புறங்களில் 50 சதவீதம் வரை பாதிப்புகள் பதிவாகி வருகின்றது. கிராமப்புறங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றை கண்டறியும் பணியில் மட்டும் சுமார் 2,500 பேர் ஈடுபட்டுள்ளனர். பாஸ்டிவ் ஆகும் நபர்களுக்கு அங்கேயே சிகிச்சை மேற்கொண்டு பரிசோதனைகள் செய்து, பாதிப்புகள் அதிகமாக உள்ளவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கும், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கும் அனுப்பி விடுகின்றனர்.

இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே ஊரக பகுதிகளான சூலூர், துடியலூர், மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, காரமடை, எஸ்.எஸ்.குளம், ஆனைமலை, சுல்தான் பேட்டை, அன்னூர், கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் சுமார் 3,100 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தற்போது 3வது அலையை எதிர்கொள்ள மீண்டும் இந்த படுக்கை வசதிகள் தற்போதும் தயார் நிலையில் உள்ளன. இந்த படுக்கை வசதிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...