பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், துண்டு போன்றவைகள் வழங்கி, அவர்களுடைய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இஸ்லாமிய பெண்கள் பிஸ்கட் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
கோவை மாநகரில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் சம அளவில் வசித்து வருகின்றனர். இதைத்தவிர மூன்றில் ஒரு பங்கு வடமாநிலத்தவர்கள் தொழில் விஷயமாக இங்கே வசித்து வருகின்றனர்.
தொடர்ந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் மதநல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையாகவும் விருப்பமாகவும் இருந்து வந்தது.
இந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு கோவையில் இருந்து இந்து பக்தர்கள் மாலை அணிவித்து பாதயாத்திரையாக நேற்றிரவு புறப்பட்டனர்.
இந்த தகவலை அறிந்த கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் வசிக்கக்கூடிய இஸ்லாமிய பெண்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு வந்து அந்த வழியாகச் செல்லக்கூடிய அனைத்து பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், துண்டு போன்றவைகள் வழங்கி, அவர்களுடைய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கும் சமய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.
கோவை மாநகரில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் சம அளவில் வசித்து வருகின்றனர். இதைத்தவிர மூன்றில் ஒரு பங்கு வடமாநிலத்தவர்கள் தொழில் விஷயமாக இங்கே வசித்து வருகின்றனர்.
தொடர்ந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் மதநல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையாகவும் விருப்பமாகவும் இருந்து வந்தது.
இந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு கோவையில் இருந்து இந்து பக்தர்கள் மாலை அணிவித்து பாதயாத்திரையாக நேற்றிரவு புறப்பட்டனர்.
இந்த தகவலை அறிந்த கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் வசிக்கக்கூடிய இஸ்லாமிய பெண்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு வந்து அந்த வழியாகச் செல்லக்கூடிய அனைத்து பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், துண்டு போன்றவைகள் வழங்கி, அவர்களுடைய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கும் சமய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.