திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த வனிதா பணியிட மாறுதல் பெற்றுச் சென்ற நிலையில், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த A.G.பாபு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக அறிவிக்கப்பட்டார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் 12-வது காவல் ஆணையராக A.G.பாபு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த வனிதா பணியிட மாறுதல் பெற்றுச் சென்ற நிலையில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த A.G.பாபு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, இன்று திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் பொது மக்கள் இணக்கமாகச் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், காவல்துறையினரின் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.