கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் கிராம பகுதியில் உள்ள தோட்டத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு இருந்த இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் மற்றும் வனத்துறையினர் மீட்டனர்.
கோவை: கோவையில் விவசாய நிலங்களில் அச்சுறுத்தி வந்த கொடிய விஷம் கொண்ட இரண்டு கண்ணாடி விரியன்பாம்புகளைவனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட்டனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் கிராம பகுதி ஒட்டியுள்ள கணேஷ் என்பவரின் விவசாய தோட்டத்தில் இரண்டு கண்ணாடி விரியன்பாம்புகள் மாட்டுத் தொழுவில்பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக, அவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் இனப்பெருக்கத்தில் இருந்த இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரை பணையம் வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். சில நாட்களாக, அப்பகுதியில் ஆட்டுக்குட்டி மற்றும் மாடுகளை கொன்று வந்த இந்த இரு பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
சுமார், 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கொடிய விஷம் கொண்ட இரு பாம்புகளையும் பாத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரருக்கும், வனத்துறையினருக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் கிராம பகுதி ஒட்டியுள்ள கணேஷ் என்பவரின் விவசாய தோட்டத்தில் இரண்டு கண்ணாடி விரியன்பாம்புகள் மாட்டுத் தொழுவில்பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக, அவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் இனப்பெருக்கத்தில் இருந்த இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரை பணையம் வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். சில நாட்களாக, அப்பகுதியில் ஆட்டுக்குட்டி மற்றும் மாடுகளை கொன்று வந்த இந்த இரு பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
சுமார், 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கொடிய விஷம் கொண்ட இரு பாம்புகளையும் பாத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரருக்கும், வனத்துறையினருக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.