கோவை அருகே ஓட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டு கைது

கோவை துடியலூர் அருகே உள்ள ஒட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: ஒட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டுவை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார் வயது 38, இவர் நேற்று தனது நண்பர் தீபக் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காகச் சென்றார். அப்போது அங்கு வந்த சப்ளையரிடம் சரவணகுமார் சைவ உணவு வேண்டும் எனக் கேட்டார்.

ஆனால் சப்ளையர் அசைவ உணவு கொண்டு வந்து கொடுத்தார். இதுகுறித்து சரவணக்குமார் கேள்வி கேட்ட போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர் கிஷோர் குமார் 40, அவரை அவரை தாக்கினர்.

இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சரவணக்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து, அவரை தாக்கிய கிஷோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் கிஷோர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

அப்போது அவர் மசாஜ் சென்டரில் லஞ்சம் பெற்றதாகக் கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கிஷோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...