கோவை துடியலூர் அருகே உள்ள ஒட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: ஒட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டுவை போலீசார் கைது செய்தனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார் வயது 38, இவர் நேற்று தனது நண்பர் தீபக் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காகச் சென்றார். அப்போது அங்கு வந்த சப்ளையரிடம் சரவணகுமார் சைவ உணவு வேண்டும் எனக் கேட்டார்.
ஆனால் சப்ளையர் அசைவ உணவு கொண்டு வந்து கொடுத்தார். இதுகுறித்து சரவணக்குமார் கேள்வி கேட்ட போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர் கிஷோர் குமார் 40, அவரை அவரை தாக்கினர்.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சரவணக்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து, அவரை தாக்கிய கிஷோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் கிஷோர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.
அப்போது அவர் மசாஜ் சென்டரில் லஞ்சம் பெற்றதாகக் கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கிஷோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார் வயது 38, இவர் நேற்று தனது நண்பர் தீபக் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காகச் சென்றார். அப்போது அங்கு வந்த சப்ளையரிடம் சரவணகுமார் சைவ உணவு வேண்டும் எனக் கேட்டார்.
ஆனால் சப்ளையர் அசைவ உணவு கொண்டு வந்து கொடுத்தார். இதுகுறித்து சரவணக்குமார் கேள்வி கேட்ட போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர் கிஷோர் குமார் 40, அவரை அவரை தாக்கினர்.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சரவணக்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து, அவரை தாக்கிய கிஷோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் கிஷோர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.
அப்போது அவர் மசாஜ் சென்டரில் லஞ்சம் பெற்றதாகக் கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கிஷோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.