உதகையில் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா: காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி திறப்பு

உதகை எச்.பி.எப்.(HPF) பகுதியில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.



நீலகிரி: உதகை எச்.பி.எப்.(HPF) பகுதியில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.



நீலகிரி மாவட்டம் உதகையில் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கரில் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. மலைப்பிரதேசம் என்பதால் பிற மாவட்டங்களை போல் இல்லாமல் உதகையில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என்ற வடிவமைப்பில் மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது.

உயிர்வேதியியல், உடல் கூறியல் பிரிவு, உடலியல் பிரிவு, நூலகப் பிரிவு, நோயியல் பிரிவு அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவு, மயக்கவியல், உயர் தொழில்நுட்ப பரிசோதனை மையம் போன்ற சிறப்பு சிகிச்சை மையங்கள் புதிய மருத்துவ கட்டிடத்தில் இடம்பெறும். மேலும், முதல்வர் குடியிருப்பு, செவிலியர் குடியிருப்பு, மாணவ-மாணவிகள் விடுதி போன்ற குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.

இவை அனைத்தும் 3 வளாகங்களாக அமைய உள்ளது. மருத்துவமனை வளாகம் 8 பிரிவுகளாக கட்டப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, உயர்தர பிணவறைகள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவர்களுக்காக 1200 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம், 108 வாகன கட்டுபாட்டு அறை உள்ளிட்டவை அடங்கும். இந்த மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பல அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...