காரமடையில் இரும்பு திருடிய 3-பேர் கைது

காரமடை தொட்டிப்பாளையம் பகுதியில், தொழிற்சாலையில் புகுந்து 200-கிலோ இரும்பு திருடிய வாலிபர்கள் 3-பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: தொழிற்சாலையில் புகுந்து 200-கிலோ இரும்பு திருடிய வாலிபர்கள் 3-பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காரமடை தொட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரவேல்(48). இவர் சென்னிவீரம்பாளையத்தில் இரும்பு தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் வேலையை முடித்து விட்டு தொழிற்சாலையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது பின்பக்கம் மரவேலி உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 200-கிலோ இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, குமாரவேல் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

பின்னர் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 3-வாலிபர்கள் அங்கு புகுந்து திருடுவது பதிவாகி இருந்தது. அவர்களின் உருவ படங்களை வைத்து போலீசார் கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் போலீசார் 3 வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் காரமடை திம்மம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த்பாபு (40), ரஞ்ஜித் (19) மற்றும் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (36) ஆகியோர் என்பதும், அவர்கள் தொழிற்சாலையில் புகுந்து 200 கிலோ இரும்பு பொருட்களைத் திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...