வைகுண்ட ஏகாதசியான வரும் 13 ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி, வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிப்பு.
கோவை: 2-டோஸ் தடுப்பூசி சான்று, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளைப் பக்தர்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு கலந்தாய்வுக் கூட்டமானது கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காரமடை நகராட்சி ஆணையர் பால்ராஜ், காரமடை காவல் நிலைய ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசியான வரும் 13 ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி, வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
சொர்க்கவாசல் வழியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், திருக்கோவில் ஸ்தலத்தார்கள், வேதவியாச ஸ்ரீசுதர்சன பட்டர், மிராசுதாரர்கள் கிருஷ்ணன், ஜெகநாதன், ஆனந்தராஜ், கட்டேமனை கவுண்டர் ரங்கராஜ், மற்றும் கோவில் அர்ச்சகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு கலந்தாய்வுக் கூட்டமானது கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காரமடை நகராட்சி ஆணையர் பால்ராஜ், காரமடை காவல் நிலைய ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசியான வரும் 13 ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி, வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
சொர்க்கவாசல் வழியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், திருக்கோவில் ஸ்தலத்தார்கள், வேதவியாச ஸ்ரீசுதர்சன பட்டர், மிராசுதாரர்கள் கிருஷ்ணன், ஜெகநாதன், ஆனந்தராஜ், கட்டேமனை கவுண்டர் ரங்கராஜ், மற்றும் கோவில் அர்ச்சகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.