கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்று எல்லைக்குட்பட்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வரை சாலையோர பகுதியில் 200-கிலோ நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.
கோவை: கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்று எல்லைக்குட்பட்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வரை சாலையோர பகுதியில் 200-கிலோ நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்று எல்லைக்குட்பட்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வரை சாலையோரம் உள்ள நெகிழிக் குப்பைகள் மற்றும் மக்கும் குப்பைகளை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் அகற்றப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் தலைமையில், கோட்ட உதவி பாதுகாவலர், வனச்சரக அலுவலர் சரக பணியாளர்கள் 25-பேர் மற்றும் மருதமலை மலைவாழ் மக்கள் கிராமத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் 10-பேர் கொண்ட குழுவினர் சுமார் 2-கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள 200-கிலோ எடை கொண்ட நெகிழி குப்பைகளை அகற்றி உள்ளனர்.
மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கோவில் அருகே உள்ள கடைகளுக்கும் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் வரும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்து கோவில் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் கடைகளில் நெகிழிப் பைகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில், கிடந்த யானை சாணத்தில் பால் பாக்கெட் போன்ற நெகிழி கழிவுகள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்று எல்லைக்குட்பட்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வரை சாலையோரம் உள்ள நெகிழிக் குப்பைகள் மற்றும் மக்கும் குப்பைகளை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் அகற்றப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் தலைமையில், கோட்ட உதவி பாதுகாவலர், வனச்சரக அலுவலர் சரக பணியாளர்கள் 25-பேர் மற்றும் மருதமலை மலைவாழ் மக்கள் கிராமத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் 10-பேர் கொண்ட குழுவினர் சுமார் 2-கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள 200-கிலோ எடை கொண்ட நெகிழி குப்பைகளை அகற்றி உள்ளனர்.
மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கோவில் அருகே உள்ள கடைகளுக்கும் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் வரும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்து கோவில் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் கடைகளில் நெகிழிப் பைகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில், கிடந்த யானை சாணத்தில் பால் பாக்கெட் போன்ற நெகிழி கழிவுகள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.