சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

நீட் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


கோவை: நீட் தொடர்பாகத் தமிழக அரசு அனுப்பிய சட்ட முன் வடிவு தொடர்பாக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் 30-தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் கூறுகையில், திமுக அரசு பதவி ஏற்றவுடன் ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில், நீட் தொடர்பாக வல்லுநர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து, சட்ட முன்வடிவு வழங்கியது.

இந்த சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஏன் குடியரசுத் தலைவருக்கு இதுவரை அனுப்பவில்லை. 3-மாதமாக அனுப்பாமல் காலதாமதம் செய்து வருகிறார். தமிழகத்தில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் உள்ளனர்.

கூட்டாச்சி தத்துவத்தை ஆளுநர் மீறிச் செயல்படுகிறார். ஆளுநர் நீட் தொடர்பாகச் சட்ட வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி மத்திய அரசு ஒப்புதலைப் பெற்றுத் தரவேண்டும்.

இல்லையெனில் ஜனவரி 30-ம் தேதி காந்தி நினைவு நாளில் சென்னையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நீட் தொடர்பாக ஆளுநர், குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜன 30-முதல் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பாகத் தான் மட்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அதற்கு முன்பு நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த உள்ளதாகவும், இதன் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கு நீட் பாதிப்பை எடுத்துச்சொல்வோம் எனக் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...