கோவை வந்த ரயிலில் ரூ.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாநில வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை வந்த ரயிலில் ரூ.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாநில வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்பாத்திலிருந்து கோவை வழியாகக் கேரள மாநிலம் ஆலப்புழாவுக்குச் செல்லும் நேற்று இரவு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த ஒரு வாலிபரை விசாரித்ததில், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததை அடுத்து, அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, அதில் ரூ.30 லட்சம் பணம் இருந்துள்ளது. ஆனால், அதற்குரிய ஆவணங்கள் அந்த வாலிபரிடம் இல்லை. தொடர்ந்து அந்த வாலிபரை அதே ரயிலில் ஆர்பிஎப் போலீசார் கோவை அழைத்து வந்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லால் சிங் ராவ் என்பதும், சென்னையிலிருந்து ரயிலில் கோவைக்குத் தங்க நகை வாங்க வந்ததாகத் தெரிகிறது.
தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்து, கோவை ரேஸ் கோர்சில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஹவாலா பணமா? எனத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தன்பாத்திலிருந்து கோவை வழியாகக் கேரள மாநிலம் ஆலப்புழாவுக்குச் செல்லும் நேற்று இரவு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த ஒரு வாலிபரை விசாரித்ததில், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததை அடுத்து, அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, அதில் ரூ.30 லட்சம் பணம் இருந்துள்ளது. ஆனால், அதற்குரிய ஆவணங்கள் அந்த வாலிபரிடம் இல்லை. தொடர்ந்து அந்த வாலிபரை அதே ரயிலில் ஆர்பிஎப் போலீசார் கோவை அழைத்து வந்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லால் சிங் ராவ் என்பதும், சென்னையிலிருந்து ரயிலில் கோவைக்குத் தங்க நகை வாங்க வந்ததாகத் தெரிகிறது.
தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்து, கோவை ரேஸ் கோர்சில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஹவாலா பணமா? எனத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.