கிணத்துக்கடவு அருகே தாமரைகுளம் பகுதியில், இருசக்கர வாகனம் மீது ஈச்சர் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் கூலித் தொழிலாளிக்குக் கால் முறிவு ஏற்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைகுளம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஈச்சர் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் கூலித் தொழிலாளிக்குக் கால் முறிவு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(26) கூலித் தொழிலாளியான இவர், நேற்று அவினாசியிலிருந்து இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிணத்துக்கடவை அடுத்துள்ள தாமரைக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே அதிவேகமாக, கவனக்குறைவாக வந்த ஈச்சர் வேன், கதிர்வேல் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கதிர்வேலுக்குக் கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(26) கூலித் தொழிலாளியான இவர், நேற்று அவினாசியிலிருந்து இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிணத்துக்கடவை அடுத்துள்ள தாமரைக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே அதிவேகமாக, கவனக்குறைவாக வந்த ஈச்சர் வேன், கதிர்வேல் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கதிர்வேலுக்குக் கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.