வெளியூர்களில் இருந்து வந்து இறங்கியவர்கள், கோவையிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றடைய முடியாமல் தவித்தனர்.
கோவை: ஊரடங்கு நாளான நேற்று, ரயில்களில் கோவை வந்தவர்கள், வீடு போய் சேர முடியாமல் அவதியடைந்தனர்.
கோவை ரயில்வே நிலையத்தை நாளொன்றுக்கு 27 ரயில்கள் கடந்து செல்கின்றன. ஏழு ரயில்கள் இங்கிருந்து மற்ற ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கின்றன. அந்த வகையில், ரயில் போக்குவரத்திற்கு முழு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவைக்கு நேற்று காலை முதல் இரவு வரை, ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திறங்கினர். ஊரடங்கு காரணமாக உள்ளூர் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், வெளியூர்களில் இருந்து வந்திறங்கியவர்கள், கோவையிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றடைய முடியாமல் தவித்தனர்.
இதில் சிலர், அவர்களது உறவினர்களை ரயில் நிலையத்திற்கு சொந்த வாகனங்களில் வரவழைத்திருந்தனர். அவர்கள் ரயில் டிக்கெட்டுகளை போலீசாரிடம் காண்பித்து புறப்பட்டுச் சென்றனர்.
சில ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள் மருத்துவ காரணங்களுக்காகவும், அவசர பணிகளுக்காகவும் இயங்கின. அவற்றில் ரயில் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து, நேற்று பயணித்தனர்.
கோவை ரயில்வே நிலையத்தை நாளொன்றுக்கு 27 ரயில்கள் கடந்து செல்கின்றன. ஏழு ரயில்கள் இங்கிருந்து மற்ற ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கின்றன. அந்த வகையில், ரயில் போக்குவரத்திற்கு முழு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவைக்கு நேற்று காலை முதல் இரவு வரை, ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திறங்கினர். ஊரடங்கு காரணமாக உள்ளூர் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், வெளியூர்களில் இருந்து வந்திறங்கியவர்கள், கோவையிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றடைய முடியாமல் தவித்தனர்.
இதில் சிலர், அவர்களது உறவினர்களை ரயில் நிலையத்திற்கு சொந்த வாகனங்களில் வரவழைத்திருந்தனர். அவர்கள் ரயில் டிக்கெட்டுகளை போலீசாரிடம் காண்பித்து புறப்பட்டுச் சென்றனர்.
சில ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள் மருத்துவ காரணங்களுக்காகவும், அவசர பணிகளுக்காகவும் இயங்கின. அவற்றில் ரயில் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து, நேற்று பயணித்தனர்.