கோவை மாநகர காவல் துறை சார்பில் ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்


கோவையின் பல்வேறு இடங்களிலுள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் தங்கி ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி படிப்பு வரையில் படிக்கின்றனர். 

இந்த மாணவ மாணவிகளுக்கென பிரத்யேகமாக விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். அதன்படி, வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள இந்த விளையாட்டு போட்டியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தொடங்கி வைக்கிறார். 

இது குறித்து அவர் 'சிம்ப்ளி சிட்டி'க்கு அளித்த  பேட்டியில்  கூறியதாவது :- 

கோவையில் உள்ள ஆதரவற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து 5-வது ஆண்டாக வரும் 8-ம் தேதி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கோவையிலுள்ள 17 காப்பகங்களில் தங்கியிருக்கும் 700க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். 

நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் என 20 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுவோர்க்கு பரிசுகளும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிகளும் காவல்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. அன்று மாலை நடைபெற இருக்கும் பரிசளிப்பு விழாவில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...