கோவை மாநகர காவல் துறை சார்பில் ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்


கோவையின் பல்வேறு இடங்களிலுள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் தங்கி ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி படிப்பு வரையில் படிக்கின்றனர். 

இந்த மாணவ மாணவிகளுக்கென பிரத்யேகமாக விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். அதன்படி, வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள இந்த விளையாட்டு போட்டியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தொடங்கி வைக்கிறார். 

இது குறித்து அவர் 'சிம்ப்ளி சிட்டி'க்கு அளித்த  பேட்டியில்  கூறியதாவது :- 

கோவையில் உள்ள ஆதரவற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து 5-வது ஆண்டாக வரும் 8-ம் தேதி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கோவையிலுள்ள 17 காப்பகங்களில் தங்கியிருக்கும் 700க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். 

நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் என 20 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுவோர்க்கு பரிசுகளும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிகளும் காவல்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. அன்று மாலை நடைபெற இருக்கும் பரிசளிப்பு விழாவில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...