திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற பத்தாம் வகுப்பு சிறுவன் மாயமான சம்பவம் தொடர்பாக, தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற பத்தாம் வகுப்பு சிறுவன் மாயமான சம்பவம் தொடர்பாக, தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் பத்மாவதிபுரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் பாஷா சுல்தானா தம்பதியினரின் மகன் சல்மான் அகமது. இவர் பள்ளி விடுமுறை என்பதால் இன்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.
இவருடன் குளிக்கச் சென்ற நண்பர்கள் கிணற்றை விட்டு வெளியே வந்த நிலையில், வெகு நேரமாகியும் சல்மான் அகமது வெளியே வராத காரணத்தால் அவர் கிணற்றில் மூழ்கி இருப்பாரோ என்ற சந்தேகத்தில் நண்பர்கள் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பெற்றோர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கிணற்றுக்குள் மாயமான 10-ஆம் வகுப்பு சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.