திருப்பூரில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநகர போலீசார் மற்றும் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநகர போலீசார் மற்றும் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாநகர போலீசார் மற்றும் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் சார்பில், கள்ளச்சாராயம் போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மாநகராட்சி சந்திப்பு, புஷ்பா சந்திப்பு பகுதிகளில் மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மது குடித்துவிட்டு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு மதுவிலக்கு போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மேலும் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் பற்றிய புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்ற இலவச அலைபேசி எண் கொண்ட ஸ்டிக்கரும் வாகனங்களில் ஒட்டப்பட்டது.

தொடர்ந்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் இன்னல்கள் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர போலீசார் மற்றும் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் சார்பில், கள்ளச்சாராயம் போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மாநகராட்சி சந்திப்பு, புஷ்பா சந்திப்பு பகுதிகளில் மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மது குடித்துவிட்டு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு மதுவிலக்கு போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மேலும் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் பற்றிய புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்ற இலவச அலைபேசி எண் கொண்ட ஸ்டிக்கரும் வாகனங்களில் ஒட்டப்பட்டது.
தொடர்ந்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் இன்னல்கள் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் கலந்து கொண்டனர்.