இரு நாட்கள் நடக்கும் சான்றிதழ் சரி பார்ப்பில், மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றதற்கான உண்மைத்தன்மைகள் ஆராயப்பட உள்ளன.
திருப்பூர்: திருப்பூரில், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க உள்ள
மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்கியது.
தமிழகத்தில் நடப்பாண்டு, 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 18 சுயநிதி மருத்துவ கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவமனைகள், 18 சுயநிதி பல் மருத்துவமனைகள் சேர்த்து, மருத்துவத்திற்கு 6 ஆயிரத்து, 957 இடங்களுக்கும், பல் மருத்துவ படிப்பிற்கு 8 ஆயிரத்து, 882 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 7.5 சதவீத ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூரில், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற, 114 மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர்.

இவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து இரு நாட்கள் நடக்கும் சான்றிதழ் சரி பார்ப்பில், மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றதற்கான உண்மைத்தன்மைகள் ஆராயப்பட உள்ளன.

மேலும், சமூக இடைவெளி கருதி திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை மாவட்ட மாணவர்களுக்கு முறையே தனிப்பட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்கியது.
தமிழகத்தில் நடப்பாண்டு, 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 18 சுயநிதி மருத்துவ கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவமனைகள், 18 சுயநிதி பல் மருத்துவமனைகள் சேர்த்து, மருத்துவத்திற்கு 6 ஆயிரத்து, 957 இடங்களுக்கும், பல் மருத்துவ படிப்பிற்கு 8 ஆயிரத்து, 882 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 7.5 சதவீத ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூரில், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற, 114 மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர்.
இவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இரு நாட்கள் நடக்கும் சான்றிதழ் சரி பார்ப்பில், மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றதற்கான உண்மைத்தன்மைகள் ஆராயப்பட உள்ளன.
மேலும், சமூக இடைவெளி கருதி திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை மாவட்ட மாணவர்களுக்கு முறையே தனிப்பட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.