திருப்பூரில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவக்கம்..!

இரு நாட்கள் நடக்கும் சான்றிதழ் சரி பார்ப்பில், மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றதற்கான உண்மைத்தன்மைகள் ஆராயப்பட உள்ளன.


திருப்பூர்: திருப்பூரில், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க உள்ள

மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்கியது.

தமிழகத்தில் நடப்பாண்டு, 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 18 சுயநிதி மருத்துவ கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவமனைகள், 18 சுயநிதி பல் மருத்துவமனைகள் சேர்த்து, மருத்துவத்திற்கு 6 ஆயிரத்து, 957 இடங்களுக்கும், பல் மருத்துவ படிப்பிற்கு 8 ஆயிரத்து, 882 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 7.5 சதவீத ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூரில், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற, 114 மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர்.



இவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இதனைத் தொடர்ந்து இரு நாட்கள் நடக்கும் சான்றிதழ் சரி பார்ப்பில், மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றதற்கான உண்மைத்தன்மைகள் ஆராயப்பட உள்ளன.



மேலும், சமூக இடைவெளி கருதி திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை மாவட்ட மாணவர்களுக்கு முறையே தனிப்பட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...