காட்டு யானை அடிக்கடி வந்து செல்லும் பகுதியில் இந்த ஓசை எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி இரவு 7 மணி முதல் காலை 6.30 மணி வரை செயல்படும்.
கோவை: கோவை - பாலக்காடு வழித்தடத்தில் தண்டவாளம் அருகே யானை வந்தால் ஒலி எழுப்பும் புதிய கருவியை அமைக்க ரயில்வேத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கோவை மற்றும் பாலக்காடு வனப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் சிக்கி யானைகள் உயிரிழந்து வருகின்றன.
இதனை தடுப்பதற்காக காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றால் ஓசை எழுப்பக் கூடிய புதிய கருவியை ரயில்வே துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.
வனப்பகுதியில் ரயில் பாதையில் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் ஓசை எழுப்பும் கருவியை ரயில்வே துறை அமைத்துள்ளது.
பாலக்காடு - கோவை வழித்தடத்தில் வனப்பகுதியில் உள்ள வாளையாறில்இரவு நேரத்தில் காட்டு யானைகள் ரயில் பாதையில் வருகிறது. இதனால், ரயில் மோதி யானைகள் பலியாகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், வனப்பகுதியில் உள்ள ரயில் பாதை பகுதியில் சூரிய ஒளியால் செயல்படும் சப்தம் எழுப்பும் கருவியை ரயில்வே துறையினர் அமைத்தனர்.

இதிலிருந்து, எழும் சப்தம் கேட்டு காட்டு யானைகள் ரயில் பாதையில் நுழைவதைத் தடுக்க முடியும். காட்டு யானை அடிக்கடி வந்து செல்லும் பகுதியில் இந்த ஓசை எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாடு அறை வாளையாறு ரயில் நிலையத்தில் அமைந்திருக்கும். மேலும், இந்த கருவி இரவு 7 முதல் காலை 6.30 மணி வரை இது செயல்படும்.
இரவு நேரத்தில் இந்த கருவியிலிருந்து தேனீக்கள் சப்தம் மற்றும் புலி உருமல் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இதனால், காட்டு யானைகள் தங்கள் வழித்தடத்தை மாற்றிக்கொள்ளும், என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.
கோவை மற்றும் பாலக்காடு வனப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் சிக்கி யானைகள் உயிரிழந்து வருகின்றன.
இதனை தடுப்பதற்காக காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றால் ஓசை எழுப்பக் கூடிய புதிய கருவியை ரயில்வே துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.
வனப்பகுதியில் ரயில் பாதையில் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் ஓசை எழுப்பும் கருவியை ரயில்வே துறை அமைத்துள்ளது.
பாலக்காடு - கோவை வழித்தடத்தில் வனப்பகுதியில் உள்ள வாளையாறில்இரவு நேரத்தில் காட்டு யானைகள் ரயில் பாதையில் வருகிறது. இதனால், ரயில் மோதி யானைகள் பலியாகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், வனப்பகுதியில் உள்ள ரயில் பாதை பகுதியில் சூரிய ஒளியால் செயல்படும் சப்தம் எழுப்பும் கருவியை ரயில்வே துறையினர் அமைத்தனர்.
இதிலிருந்து, எழும் சப்தம் கேட்டு காட்டு யானைகள் ரயில் பாதையில் நுழைவதைத் தடுக்க முடியும். காட்டு யானை அடிக்கடி வந்து செல்லும் பகுதியில் இந்த ஓசை எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாடு அறை வாளையாறு ரயில் நிலையத்தில் அமைந்திருக்கும். மேலும், இந்த கருவி இரவு 7 முதல் காலை 6.30 மணி வரை இது செயல்படும்.
இரவு நேரத்தில் இந்த கருவியிலிருந்து தேனீக்கள் சப்தம் மற்றும் புலி உருமல் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இதனால், காட்டு யானைகள் தங்கள் வழித்தடத்தை மாற்றிக்கொள்ளும், என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.