மாங்கரை சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் 'கூகுள் பே' மூலம் லஞ்சம்

மாங்கரை சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் 'கூகுள் பே' மூலம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டனர்.


கோவை: பழங்குடியினரிடம் லஞ்சம் வாங்கிய ஏட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய போலிசிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

கோவை ஆனைகட்டி செல்லும் வழியில் மாங்கரை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் கேரளாவிலிருந்து கோவைக்கும், கோவையிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் சோதனை சாவடியில் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆனைக்கட்டியில் ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் வாழை நாரிலிருந்து யோகாசன பாய் தயாரித்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்குத் தயாரிக்கப்பட்ட வாழை நார் யோகாசனப் பாயின் ஓரப்பகுதியை தைக்கச் சின்ன தடாகத்தைச் சேர்ந்த டெய்லர் அயப்பன் என்பவரிடம் கொடுத்திருந்தனர்.

சம்பவத்தன்று இவர் யோகாசன பாயை தைத்த பின்னர் ஆனைக்கட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவல்துறை அய்யப்பனைத் தடுத்து நிறுத்தி யோகாசன பாய்க்கான பில் கொடுக்கும்படி கேட்டு உள்ளனர். அவர் பில் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் ரூ.1500 மதிப்பிலான யோகாசன பாயை பறித்து அய்யப்பனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆதிவாசி பெண்கள் வாழ்வாதாரமாக மைய நிர்வாகி சவுந்தர்ராஜன் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்திடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி ராஜபாண்டியன் விசாரணை நடத்தினார். விசாரணையில், அங்கு பணியிலிருந்த துடியலூர் காவலர் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு முத்துசாமி என்பவர் பாயை பறித்தது தெரியவந்தது. மேலும் அங்கு பணியிலிருந்த காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அவர்கள் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து பாயை பறித்த ஏட்டு முத்துசாமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

மணிகண்டன் மற்றும் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...