காவல் உதவி ஆய்வாளர் கவியரசன் இளைஞர்களுக்கு தலா 100 திருக்குறள்களை எழுதி, படிக்க வைத்து மனப்பாடம் செய்யச் சொல்லி நூதன தண்டனை வழங்கினார்.
கோவை: கோவையில் கோவில் திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்களுக்கு 100 திருக்குறள் எழுதவைத்து மதுக்கரை போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
கோவை மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றதாக தெரிகிறது. அங்கு ஜமாப் மேளத்திற்கு உள்ளூர் இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுக்கரை போலீசார் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் உதவி ஆய்வாளர் கவியரசன் இளைஞர்களுக்கு ஆளுக்கு தலா 100 திருக்குறள்களை எழுதி, படிக்க வைத்து மனப்பாடம் செய்யச் சொல்லி நூதன தண்டனை வழங்கினார்.
இதையடுத்து, இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை எழுதி காட்டியபின் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவை மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றதாக தெரிகிறது. அங்கு ஜமாப் மேளத்திற்கு உள்ளூர் இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுக்கரை போலீசார் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் உதவி ஆய்வாளர் கவியரசன் இளைஞர்களுக்கு ஆளுக்கு தலா 100 திருக்குறள்களை எழுதி, படிக்க வைத்து மனப்பாடம் செய்யச் சொல்லி நூதன தண்டனை வழங்கினார்.
இதையடுத்து, இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை எழுதி காட்டியபின் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.