கோவையில் கோவில் திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள்..! 100 திருக்குறள் எழுத வைத்து நூதன தண்டனை..!

காவல் உதவி ஆய்வாளர் கவியரசன் இளைஞர்களுக்கு தலா 100 திருக்குறள்களை எழுதி, படிக்க வைத்து மனப்பாடம் செய்யச் சொல்லி நூதன தண்டனை வழங்கினார்.


கோவை: கோவையில் கோவில் திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்களுக்கு 100 திருக்குறள் எழுதவைத்து மதுக்கரை போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

கோவை மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றதாக தெரிகிறது. அங்கு ஜமாப் மேளத்திற்கு உள்ளூர் இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுக்கரை போலீசார் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.



பின்னர் உதவி ஆய்வாளர் கவியரசன் இளைஞர்களுக்கு ஆளுக்கு தலா 100 திருக்குறள்களை எழுதி, படிக்க வைத்து மனப்பாடம் செய்யச் சொல்லி நூதன தண்டனை வழங்கினார்.

இதையடுத்து, இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை எழுதி காட்டியபின் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...