பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையத்தில் சுவரில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையத்தில் சுவரில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையம் கோபால்சாமி என்பவரது வீட்டில் பொங்கல் விழாவுக்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தோட்டத்து சாலையில் வெள்ளை அடித்துக்கொண்டிருந்த கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த வசந்தி (45) என்ற பெண் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.
உடனே, தோட்டத்தின் உரிமையாளர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததின் பேரில், வசந்தி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தி, இன்று உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையம் கோபால்சாமி என்பவரது வீட்டில் பொங்கல் விழாவுக்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தோட்டத்து சாலையில் வெள்ளை அடித்துக்கொண்டிருந்த கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த வசந்தி (45) என்ற பெண் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.
உடனே, தோட்டத்தின் உரிமையாளர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததின் பேரில், வசந்தி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தி, இன்று உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.