கோவை மாவட்டத்தை புறக்கணிக்கும் இரயில்வே துறையை கண்டிக்கிறோம் - பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூர் ரயிலை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.



கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூர் ரயிலை இயக்க வேண்டும், பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய ரயில்வே கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதாகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செலயாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில்: பல்வேறு போராட்டங்களுக்கு பின் திண்டுக்கல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டும், கோவை வழியாக ரயில்களை இயக்க ரயில்வே துறை மறுத்து கோவையை புறக்கணித்து வருகிறது. இதற்கு உதாரணமாக, திருச்செந்தூர் ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க கோரிக்கை வைத்தும், பாலக்காட்டில் இருந்து அந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

எனவே, ரயில்வே துறையையும், அதனை ஆளும் மத்திய அரசையும் கண்டித்து இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைக்க கோரிக்கை வைக்கிறோம், என்று கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், தமிழ் புலிகள், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திமுக, தமுமுக உட்பட 20க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...