திருப்பூர் அருகே நீர் நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மேலும், அதிகாரியின் உத்தரவை மூன்று ஆண்டுகளாகியும் பின்பற்றாத சுங்கச்சாவடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அவிநாசி பாளையம் அருகே நீர் நிலையில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் பகுதியில் நீர் நிலையில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி அலுவலகத்தை அகற்றக்கோரி வட்டாட்சியர் உத்தரவிட்டும் தற்போது வரை அகற்றாமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில் இன்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தெற்கு வட்டம் அவிநாசி பாளையம் பகுதியில் நீர்நிலை குட்டையை ஆக்கிரமிப்பு செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுங்கச்சாவடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே 2018ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் கோட்டாட்சியர் ஆகியோரிடம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக அதே 2018ம் ஆண்டு திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சார்பில் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை 15 தினங்களுக்குள் அகற்றக்கோரி பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு பிறப்பித்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்த போதிலும் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லாமல் போய் விட்டதாகவும் கூறி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நீரிலேயே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை உடனடியாக அகற்றுவதோடு மட்டுமல்லாமல் அதிகாரியின் உத்தரவை மூன்று ஆண்டுகளாகியும் பின்பற்றாத சுங்கச்சாவடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...