புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று கை ரேகைகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காளப்பட்டி அடுத்த பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் கணேஷ் என்பவரின் மகன் கிறிஸ்டோபர் (29). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சோமனூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட சென்றுவிட்டார்.
இந்நிலையில், மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் வளையல்கள், 7 பவுன் தங்க டாலர்கள், 4 பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் கமல் மற்றும் 3 பவுன் நெக்லஸ் ஆகியவை உள்ளிட்ட 18 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கிறிஸ்டோபர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று கை ரேகைகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காளப்பட்டி அடுத்த பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் கணேஷ் என்பவரின் மகன் கிறிஸ்டோபர் (29). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சோமனூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட சென்றுவிட்டார்.
இந்நிலையில், மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் வளையல்கள், 7 பவுன் தங்க டாலர்கள், 4 பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் கமல் மற்றும் 3 பவுன் நெக்லஸ் ஆகியவை உள்ளிட்ட 18 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கிறிஸ்டோபர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று கை ரேகைகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.