கோவையில் லாட்டரி விற்ற மூவர் கைது..!

மேலும் ஆன்லைன் மூலம் முடிவுகளை அறிவிப்பதற்காக வைத்திருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் லாட்டரி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சாய்பாபா காலனி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கே.கே. புதூர் காமராஜர் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தொடர்ந்து இப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும், மேலும் ஆன்லைன் மூலம் முடிவுகளை அறிவிப்பதற்காக வைத்திருந்த 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் ரமேஷ் குமார் (40) மற்றும் கோவை இடையர் வீதிப் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் ராஜசேகர் (31) என்பதும் தெரியவந்தது. பின்னர், இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வெள்ளமடை பகுதியில் தொட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே லாட்டரி விற்றுக்கொண்டிருந்த பழனிசாமி என்பவரின் மகன் மோகன்ராஜ் (33) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...