மேலும் ஆன்லைன் மூலம் முடிவுகளை அறிவிப்பதற்காக வைத்திருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் லாட்டரி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கே.கே. புதூர் காமராஜர் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தொடர்ந்து இப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும், மேலும் ஆன்லைன் மூலம் முடிவுகளை அறிவிப்பதற்காக வைத்திருந்த 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் ரமேஷ் குமார் (40) மற்றும் கோவை இடையர் வீதிப் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் ராஜசேகர் (31) என்பதும் தெரியவந்தது. பின்னர், இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வெள்ளமடை பகுதியில் தொட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே லாட்டரி விற்றுக்கொண்டிருந்த பழனிசாமி என்பவரின் மகன் மோகன்ராஜ் (33) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
கோவை சாய்பாபா காலனி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கே.கே. புதூர் காமராஜர் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தொடர்ந்து இப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும், மேலும் ஆன்லைன் மூலம் முடிவுகளை அறிவிப்பதற்காக வைத்திருந்த 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் ரமேஷ் குமார் (40) மற்றும் கோவை இடையர் வீதிப் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் ராஜசேகர் (31) என்பதும் தெரியவந்தது. பின்னர், இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வெள்ளமடை பகுதியில் தொட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே லாட்டரி விற்றுக்கொண்டிருந்த பழனிசாமி என்பவரின் மகன் மோகன்ராஜ் (33) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.