கோவையில் 40 ஊராட்சிகளில் 99 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்..!

மேலும், கோவை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 40 ஊராட்சிகளில் 99 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறப்பு முகாம்கள், மெகா தடுப்பூசி முகாம்கள், வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 40 ஊராட்சிகளில் 99 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடா்பாக சுகாதாரத் துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:-

ஊராட்சிகளில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தடுப்பூசி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டார சுகாதார அலுவலா், ஊராட்சித் தலைவா்களுக்கு பாராட்டுச் சான்று அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, ஊராட்சித் தலைவா்கள், வட்டார அலுவலா்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். இவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்துவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...