கோவையில் 40 ஊராட்சிகளில் 99 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்..!

மேலும், கோவை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 40 ஊராட்சிகளில் 99 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறப்பு முகாம்கள், மெகா தடுப்பூசி முகாம்கள், வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 40 ஊராட்சிகளில் 99 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடா்பாக சுகாதாரத் துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:-

ஊராட்சிகளில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தடுப்பூசி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டார சுகாதார அலுவலா், ஊராட்சித் தலைவா்களுக்கு பாராட்டுச் சான்று அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, ஊராட்சித் தலைவா்கள், வட்டார அலுவலா்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். இவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்துவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...