இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் கேரளா கல்லூரி மாணவன் பரிதாபமாக பலியானார்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தன் பாறா பகுதியைச் சேர்ந்தவர் அப்பாய்விக்கி, கூலித் தொழிலாளியான இவருக்கு அமல்(23) என்ற மகன் உள்ளார். இடுக்கி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று நண்பர் பிரதீப் உடன் கோவையில் புதிய செல்போன் வாங்க இருசக்கர வாகனத்தில் அமல் வந்து கொண்டிருந்தார்.
இதனிடையே, கிணத்துக்கடவு கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது கோவையில் இருந்து வந்த கார் ஒன்று அமுல் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த அமுல் மற்றும் பிரதீப் பலத்த காயமடைந்தனர் பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அமுல் உயிரிழந்தார். அவரது நண்பர் பிரதீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தன் பாறா பகுதியைச் சேர்ந்தவர் அப்பாய்விக்கி, கூலித் தொழிலாளியான இவருக்கு அமல்(23) என்ற மகன் உள்ளார். இடுக்கி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று நண்பர் பிரதீப் உடன் கோவையில் புதிய செல்போன் வாங்க இருசக்கர வாகனத்தில் அமல் வந்து கொண்டிருந்தார்.
இதனிடையே, கிணத்துக்கடவு கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது கோவையில் இருந்து வந்த கார் ஒன்று அமுல் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த அமுல் மற்றும் பிரதீப் பலத்த காயமடைந்தனர் பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அமுல் உயிரிழந்தார். அவரது நண்பர் பிரதீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.