தேர்தல் ஆணைய மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தல்..!

வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை தேர்தல் ஆணையத்தின் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான இணையதளம் வாயிலாக போட்டிகள் நடக்க உள்ளன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவர்கள் மற்றும், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், சுவரொட்டி வரைதல், ஒரு வரியில் விழிப்புணர்வு வாசகம், பாட்டு, குழு நடனம், கட்டுரைப்போட்டி ஆகியவை மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடத்தப்படும்.

மற்றவர்கள் மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் இணையதளமான, https://www.elections.tn.gov.in/ல் உள்ள எஸ்.வி.இ.இ.பி., போட்டி - 2022 என்ற

இணைய வழியின் மூலம் வரும் 31ம் தேதி வரை போட்டியில் பங்கேற்கலாம்.

இணைய வழியின் மூலம் வரும், 31ம் தேதி வரை போட்டியில் பங்கேற்கலாம்.வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, ரூ.5,000, இரண்டாம் பரிசு, ரூ.3,000, மூன்றாம் பரிசு, ரூ.2,000 என, பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...