தேர்தல் ஆணைய மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தல்..!

வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை தேர்தல் ஆணையத்தின் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான இணையதளம் வாயிலாக போட்டிகள் நடக்க உள்ளன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவர்கள் மற்றும், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், சுவரொட்டி வரைதல், ஒரு வரியில் விழிப்புணர்வு வாசகம், பாட்டு, குழு நடனம், கட்டுரைப்போட்டி ஆகியவை மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடத்தப்படும்.

மற்றவர்கள் மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் இணையதளமான, https://www.elections.tn.gov.in/ல் உள்ள எஸ்.வி.இ.இ.பி., போட்டி - 2022 என்ற

இணைய வழியின் மூலம் வரும் 31ம் தேதி வரை போட்டியில் பங்கேற்கலாம்.

இணைய வழியின் மூலம் வரும், 31ம் தேதி வரை போட்டியில் பங்கேற்கலாம்.வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, ரூ.5,000, இரண்டாம் பரிசு, ரூ.3,000, மூன்றாம் பரிசு, ரூ.2,000 என, பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...