பொள்ளாச்சியில் ரேக்ளா பந்தயம்... சீறிப்பாய்ந்த காளைகள்..!

திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில், பொள்ளாச்சி அருகே காங்கேயம் காளை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி அருகே காங்கேயம் காளை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆழியார் சாலை மணல்மேடு பகுதியில் அழிந்துவரும் காங்கேயம் காளைகள் வளர்ப்பு குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், நாட்டின காளைகள் அபிவிருத்தியை அதிகப்படுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

போட்டியை திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.



நிர்ணயிக்கப்பட்ட 300 மீட்டர் தூரத்தை கடக்க சீறிப்பாய்ந்த காளைகளை ஆரவாரத்துடன் கிராம மக்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...