கிணத்துக்கடவு தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரி சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி கிணத்துக்கடவு தபால் நிலையம் முன்பு ரயில் பயணிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் பித்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரி சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலக்காடு கோட்டத்தை கண்டித்தும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை சேலம் ரயில்வே கோட்டத்தில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மேலும், கோவையில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ராமேஸ்வரம், திண்டுக்கல், தூத்துக்குடி ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் உதயகுமார், ரகு, வேல்முருகன், திமுக நிர்வாகிகள் கதிர்வேல், சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, கணேசன், ரூபன், கீதா கலைவாணி, லட்சுமணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் வித்யாசாகர், சிவராஜ், செந்தில், அறிவொளி வெள்ளிங்கிரி, கோபாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மருதாசலம், மணிகண்டன், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கிணத்துக்கடவு சுப்பிரமணியன், கலைச்செல்வன், ஆதித்தமிழர் பேரவை சார்பாக வானுகன், தேமுதிக சார்பாக ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் பித்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரி சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலக்காடு கோட்டத்தை கண்டித்தும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை சேலம் ரயில்வே கோட்டத்தில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மேலும், கோவையில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ராமேஸ்வரம், திண்டுக்கல், தூத்துக்குடி ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் உதயகுமார், ரகு, வேல்முருகன், திமுக நிர்வாகிகள் கதிர்வேல், சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, கணேசன், ரூபன், கீதா கலைவாணி, லட்சுமணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் வித்யாசாகர், சிவராஜ், செந்தில், அறிவொளி வெள்ளிங்கிரி, கோபாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மருதாசலம், மணிகண்டன், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கிணத்துக்கடவு சுப்பிரமணியன், கலைச்செல்வன், ஆதித்தமிழர் பேரவை சார்பாக வானுகன், தேமுதிக சார்பாக ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.