கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களை குழந்தைகள் நல அமைப்பு மற்றும் செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் அனுப்பப்பட்டனர்.
Coimbatore: கோவையில் தங்களது சொந்த உடன்பிறப்புகளான சிறுவர்களை பேனா விற்கும் போர்வையில் பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களை செல்வபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தைகள் நல அமைப்பினரின் ரகசிய விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகே சிறுவர்கள் சிலர் பேனா விற்பது போல பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், குழந்தைகள் நல அலுவலர் R. சூர்யமணி (25) சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ரகசிய விசாரணை நடத்தினார்.
விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலைச் சேர்ந்த நபூல்ஷா (23) மற்றும் அவரது சகோதரர் சாபுல்ஷா (30) ஆகிய இருவரும், தங்களது சொந்த சிறுவயது உடன்பிறப்புகளை பேனா விற்பதாக நாடகமாடி பிச்சை எடுக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் குழந்தைகளை சுரண்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து செல்வபுரம் காவல் ஆய்வாளர் Jessis Udhay Raj வழக்குப் பதிவு செய்து, நபூல்ஷா மற்றும் சாபுல்ஷா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்பு செய்யப்பட்ட சிறுவர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.
குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் செல்வபுரம் காவல்துறையினரின் உடனடி நடவடிக்கையால் குழந்தைகள் பிச்சை எடுக்கும் கொடுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகே சிறுவர்கள் சிலர் பேனா விற்பது போல பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், குழந்தைகள் நல அலுவலர் R. சூர்யமணி (25) சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ரகசிய விசாரணை நடத்தினார்.
விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலைச் சேர்ந்த நபூல்ஷா (23) மற்றும் அவரது சகோதரர் சாபுல்ஷா (30) ஆகிய இருவரும், தங்களது சொந்த சிறுவயது உடன்பிறப்புகளை பேனா விற்பதாக நாடகமாடி பிச்சை எடுக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் குழந்தைகளை சுரண்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து செல்வபுரம் காவல் ஆய்வாளர் Jessis Udhay Raj வழக்குப் பதிவு செய்து, நபூல்ஷா மற்றும் சாபுல்ஷா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்பு செய்யப்பட்ட சிறுவர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.
குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் செல்வபுரம் காவல்துறையினரின் உடனடி நடவடிக்கையால் குழந்தைகள் பிச்சை எடுக்கும் கொடுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.