பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களை குழந்தைகள் நல அமைப்பு மற்றும் செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் அனுப்பப்பட்டனர்.


Coimbatore: கோவையில் தங்களது சொந்த உடன்பிறப்புகளான சிறுவர்களை பேனா விற்கும் போர்வையில் பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களை செல்வபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தைகள் நல அமைப்பினரின் ரகசிய விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகே சிறுவர்கள் சிலர் பேனா விற்பது போல பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், குழந்தைகள் நல அலுவலர் R. சூர்யமணி (25) சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ரகசிய விசாரணை நடத்தினார்.

விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலைச் சேர்ந்த நபூல்ஷா (23) மற்றும் அவரது சகோதரர் சாபுல்ஷா (30) ஆகிய இருவரும், தங்களது சொந்த சிறுவயது உடன்பிறப்புகளை பேனா விற்பதாக நாடகமாடி பிச்சை எடுக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் குழந்தைகளை சுரண்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து செல்வபுரம் காவல் ஆய்வாளர் Jessis Udhay Raj வழக்குப் பதிவு செய்து, நபூல்ஷா மற்றும் சாபுல்ஷா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்பு செய்யப்பட்ட சிறுவர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.

குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் செல்வபுரம் காவல்துறையினரின் உடனடி நடவடிக்கையால் குழந்தைகள் பிச்சை எடுக்கும் கொடுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...