பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களை குழந்தைகள் நல அமைப்பு மற்றும் செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் அனுப்பப்பட்டனர்.


Coimbatore: கோவையில் தங்களது சொந்த உடன்பிறப்புகளான சிறுவர்களை பேனா விற்கும் போர்வையில் பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களை செல்வபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தைகள் நல அமைப்பினரின் ரகசிய விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகே சிறுவர்கள் சிலர் பேனா விற்பது போல பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், குழந்தைகள் நல அலுவலர் R. சூர்யமணி (25) சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ரகசிய விசாரணை நடத்தினார்.

விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலைச் சேர்ந்த நபூல்ஷா (23) மற்றும் அவரது சகோதரர் சாபுல்ஷா (30) ஆகிய இருவரும், தங்களது சொந்த சிறுவயது உடன்பிறப்புகளை பேனா விற்பதாக நாடகமாடி பிச்சை எடுக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் குழந்தைகளை சுரண்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து செல்வபுரம் காவல் ஆய்வாளர் Jessis Udhay Raj வழக்குப் பதிவு செய்து, நபூல்ஷா மற்றும் சாபுல்ஷா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்பு செய்யப்பட்ட சிறுவர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.

குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் செல்வபுரம் காவல்துறையினரின் உடனடி நடவடிக்கையால் குழந்தைகள் பிச்சை எடுக்கும் கொடுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...