பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கிணத்துக்கடவு தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரி சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி கிணத்துக்கடவு தபால் நிலையம் முன்பு ரயில் பயணிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் பித்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரி சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலக்காடு கோட்டத்தை கண்டித்தும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை சேலம் ரயில்வே கோட்டத்தில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும், கோவையில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ராமேஸ்வரம், திண்டுக்கல், தூத்துக்குடி ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் உதயகுமார், ரகு, வேல்முருகன், திமுக நிர்வாகிகள் கதிர்வேல், சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, கணேசன், ரூபன், கீதா கலைவாணி, லட்சுமணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் வித்யாசாகர், சிவராஜ், செந்தில், அறிவொளி வெள்ளிங்கிரி, கோபாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மருதாசலம், மணிகண்டன், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கிணத்துக்கடவு சுப்பிரமணியன், கலைச்செல்வன், ஆதித்தமிழர் பேரவை சார்பாக வானுகன், தேமுதிக சார்பாக ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...